Chapter 8

Thirunaraiyur 5 - (மான் கொண்ட)

திருநறையூர் 5
Thirunaraiyur 5 - (மான் கொண்ட)

The āzhvār, having attained the divine darshan of Lord Thirumal at Thirunaraiyur, sings with a heart full of joy.


The celestial beings, the devatās such as Indra and others, are often possessed of desires for benefits other than the supreme and everlasting bliss of enjoying Bhagavān Himself. In His infinite compassion and boundless grace,

+ Read more

திருநறையூர்த் திருமாலின் திவ்விய தரிசனம் கிடைக்கப் பெற்ற ஆழ்வார் மனமகிழ்ந்து பாடுகிறார்.

Verses: 1518 to 1527
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a God
  • PT 6.8.1
    1518 ## மான் கொண்ட தோல் * மார்வின் மாணி ஆய் * மாவலி மண்
    தான் கொண்டு * தாளால் அளந்த பெருமானை **
    தேன் கொண்ட சாரல் * திருவேங்கடத்தானை *
    நான் சென்று நாடி * நறையூரில் கண்டேனே 1
  • PT 6.8.2
    1519 முந்நீரை முன் நாள் * கடைந்தானை * மூழ்த்த நாள்
    அந் நீரை மீன் ஆய் * அமைத்த பெருமானை *
    தென் ஆலி மேய திருமாலை எம்மானை *
    நல் நீர் சூழ் * நறையூரில் கண்டேனே 2
  • PT 6.8.3
    1520 தூ வாய புள் ஊர்ந்து வந்து * துறை வேழம் *
    மூவாமை நல்கி * முதலை துணித்தானை **
    தேவாதிதேவனைச் * செங் கமலக் கண்ணானை *
    நாவாய் உளானை * நறையூரில் கண்டேனே 3
  • PT 6.8.4
    1521 ஓடா அரி ஆய் * இரணியனை ஊன் இடந்த *
    சேடு ஆர் பொழில் சூழ் * திருநீர்மலையானை **
    வாடா மலர்த் துழாய் * மாலை முடியானை *
    நாள்தோறும் நாடி * நறையூரில் கண்டேனே 4
  • PT 6.8.5
    1522 கல் ஆர் மதிள் சூழ் * கதி இலங்கைக் கார் அரக்கன் *
    வல் ஆகம் கீள * வரி வெம் சரம் துரந்த
    வில்லானை ** செல்வ விபீடணற்கு * வேறாக *
    நல்லானை நாடி * நறையூரில் கண்டேனே 5
  • PT 6.8.6
    1523 உம்பர் உலகோடு * உயிர் எல்லாம் உந்தியில் *
    வம்பு மலர்மேல் * படைத்தானை மாயோனை **
    அம்பு அன்ன கண்ணாள் * அசோதை தன் சிங்கத்தை *
    நம்பனை நாடி * நறையூரில் கண்டேனே 6
  • PT 6.8.7
    1524 கட்டு ஏறு நீள் சோலைக் * காண்டவத்தைத் தீ மூட்டி
    விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை **
    மட்டு ஏறு கற்பகத்தை * மாதர்க்கு ஆய் * வண் துவரை
    நட்டானை நாடி * நறையூரில் கண்டேனே 7
  • PT 6.8.8
    1525 மண்ணின் மீ பாரம் கெடுப்பான் * மற மன்னர் *
    பண்ணின்மேல் வந்த * படை எல்லாம் பாரதத்து **
    விண்ணின் மீது ஏற * விசயன் தேர் ஊர்ந்தானை *
    நண்ணி நான் நாடி * நறையூரில் கண்டேனே 8
  • PT 6.8.9
    1526 ## பொங்கு ஏறு நீள் சோதிப் * பொன் ஆழி தன்னோடும் *
    சங்கு ஏறு கோலத் * தடக் கைப் பெருமானை **
    கொங்கு ஏறு சோலைக் * குடந்தைக் கிடந்தானை *
    நம் கோனை நாடி * நறையூரில் கண்டேனே 9
  • PT 6.8.10
    1527 ## மன்னு மதுரை * வசுதேவர் வாழ் முதலை *
    நல் நறையூர் * நின்ற நம்பியை ** வம்பு அவிழ் தார்க்
    கல் நவிலும் தோளான் * கலியன் ஒலி வல்லார் *
    பொன் உலகில் வானவர்க்குப் * புத்தேளிர் ஆகுவரே 10