PT 3.9.2

The Abode of Narasiṁha is Vaikunta Viṇṇakaram

நரசிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்

1229 திண்ணியதோரரியுருவாய்த்திசையனைத்தும் நடுங்கத்

தேவரொடுதானவர்கள் திசைப்ப * இரணியனை

நண்ணிஅவன்மார்வகலத்து உகிர்மடுத்தநாதன்

நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

எண்ணில்மிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையும்

ஏழிசையும்கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *

மண்ணில்மிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

Text size