This is the Temple of the Slayer of Rāvaṇa
இராவணனைக் கொன்றவன் கோயில் இதுதான்
1232 மின்னனையநுண்மருங்குல்மெல்லியற்கா இலங்கை
வேந்தன்முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *
தன்னிகரில்சிலைவளைத்து அன்றுஇலங்கைபொடி செய்த
தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
செந்நெலொடுசெங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீரொடுமிடைந்துகழனிதிகழ்ந்துஎங்கும் *
மன்னுபுகழ்வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!