Your browser does not support the audio element.
audio
1952 குன்றமொன்றெடுத்தேந்தி * மாமழை
அன்றுகாத்தஅம்மான் * அரக்கரை
வென்றவில்லியார் வீரமேகொலோ? *
தென்றல்வந்து தீவீசும்என்செய்கேன்? (2)
1953 காரும்வார்பனிக் கடலும், அன்னவன் *
தாரும்மார்வமும் கண்டதண்டமோ? *
சோருமாமுகில் துளியினூடுவந்து *
ஈரவாடைதான் ஈருமென்னையே.
1954 சங்குமாமையும் தளருமேனிமேல் *
திங்கள்வெங்கதிர் சீறும்என்செய்கேன்? *
பொங்குவெண்திரைப் புணரிவண்ணனார் *
கொங்கலார்ந்ததார் கூவும்என்னையே.
1955 அங்கோராய்க்குலத்துள் வளர்ந்துசென்று *
அங்கோர் தாயுருவாகிவந்தவள் *
கொங்கைநஞ்சுண்ட கோயின்மைகொலோ? *
திங்கள்வெங்கதிர் சீறுகின்றதே.
1956 அங்குஒராளரியாய் அவுணனை *
பங்கமா இருகூறுசெய்தவன் *
மங்குல்மாமதி வாங்கவேகொலோ? *
பொங்குமாகடல் புலம்புகின்றதே.
1957 சென்றுவார்சிலைவளைத்து * இலங்கையை
முன்றில்பெண்ணைமேல் முளரிக்கூட்டகத்து *
அன்றிலின்குரல் அடரும்என்னையே.
1958 பூவைவண்ணனார் புள்ளின்மேல்வர *
மேவிநின்றுநான் கண்டதண்டமோ? *
வீவிலைங்கணை வில்லிஅம்புகோத்து *
ஆவியே இலக்காகஎய்வதே.
1959 மால்இனந்துழாய் வரும்என்நெஞ்சகம் *
மாலின்அந்துழாய் வந்துஎன்னுள்புக *
கோலவாடையும் கொண்டுவந்தது * ஓர்
ஆலிவந்ததால் அரிதுகாவலே.
1960 கொண்டையொண்கணும்துயிலும் * என்னிறம்
பண்டுபண்டுபோலொக்கும் * மிக்கசீர்த்
தொண்டரிட்ட பூந்துளவின்வாசமே *
வண்டுகொண்டுவந்து ஊதுமாகிலே.
1961 அன்றுபாரதத்து ஐவர்தூதனாய் *
சென்றமாயனைச் செங்கண்மாலினை *
மன்றிலார்புகழ் மங்கைவாள்கலி
கன்றி * சொல்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)