Your browser does not support the audio element.
audio
463 சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய்! * உலகு
தன்னைவாழநின்றநம்பீ! தாமோதரா! சதிரா!
என்னையும்என்னுடைமையையும் உன்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2)
464 பறவையேறுபரம்புருடா! நீஎன்னைக்கைக்கொண்டபின் *
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் *
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் *
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே.
465 எம்மனா! என்குலதெய்வமே! என்னுடைய நாயகனே! *
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? *
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் *
சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே.
466 கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் *
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் *
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா *
தடவரைத்தோள்சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே.
467 பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் *
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் *
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் *
என்னப்பா! என்னிருடீகேசா! என்னுயிர்க்காவலனே!
468 உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் *
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் *
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ! *
என்னிடைவந்துஎம்பெருமான்! இனியெங்குப்போகின்றதே?
469 பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் *
திருப்பொலிந்தசேவடி என்சென்னியின்மேல்பொறித்தாய் *
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றுஉன்வாசகமே *
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. (2)
470 அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து * என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்! *
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக *
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே.
471 பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு * ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ! *
தனிக்கடலே! தனிச்சுடரே! தனியுலகே! என்றென்று *
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2)
472 தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் *
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி! *
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் *
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2)
473 வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே *
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை *
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை *
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2)