மொய் செறிவு காயா மலர் நிறவா! கரு முகில் போல் உருவா! கானகம் மா மடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா! துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே! ஆயம் அறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் ஆய! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – 1-5-6-
பதவுரை
காய மலர்–காயாம் பூப் போன்ற நிறவா–நிறத்தை யுடையவனே!