Your browser does not support the audio element.
audio
627 கண்ணனென்னும்கருந்தெய்வம் காட்சிபழகிக்கிடப்பேனை *
புண்ணில்புளிப்பெய்தாற் போலப்புறநின்றழகுபேசாதே *
பெண்ணின்வருத்தமறியாத பெருமா னரையில்பீதக
வண்ணஆடைகொண்டு * என்னை வாட்டம்தணியவீசீரே. (2)
628 பாலாலிலையில்துயில்கொண்ட பரமன்வலைப்பட்டிருந்தேனை *
வேலால்துன்னம்பெய்தாற்போல் வேண்டிற்றெல்லாம்பேசாதே *
கோலால்நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக்கிடந்தகுடமாடி *
நீலார் தண்ணந்துழாய்கொண்டு என்நெறிமென்குழல்மேல்சூட்டீரே.
629 கஞ்சைக்காய்ந்தகருவல்லி கடைக்கணென்னும்சிறைக்கோலால் *
நெஞ்சூடுருவவேவுண்டு நிலையும்தளர்ந்துநைவேனை *
அஞ்சேலென்னானவனொருவன் அவன்மார்வணிந்தவனமாலை *
வஞ்சியாதேதருமாகில் மார்வில்கொணர்ந்துபுரட்டீரே.
630 ஆரேயுலகத்தாற்றுவார்? ஆயர்பாடிகவர்ந்துண்ணும் *
காரேறுழக்கவுழக்குண்டு தளர்ந்தும்முறிந்தும்கிடப்பேனை *
ஆராவமுதமனையான்றன் அமுதவாயிலூறிய *
நீர்தான்கொணர்ந்துபுலராமே பருக்கியிளைப்பைநீக்கிரே.
631 அழிலும்தொழிலுமுருக்காட்டான் அஞ்சேலென்னானவனொருவன் *
தழுவிமுழுகிப்புகுந்தென்னைச் சுற்றிச்சுழன்றுபோகானால் *
தழையின்பொழில்வாய்நிரைப்பின்னே நெடுமாலூதிவருகின்ற *
குழலின்தொளைவாய்நீர்கொண்டு குளிரமுகத்துத்தடவீரே.
632 நடையொன்றில்லாவுலகத்து நந்தகோபன்மகனென்னும் *
கொடியகடியதிருமாலால் குளப்புக்கூறுகொளப்பட்டு *
புடையும்பெயரகில்லேன்நான் போட்கன்மிதித்தஅடிப்பாட்டில் *
பொடித்தான்கொணர்ந்துபூசீர்கள் போகாவுயிரென்னுடம்பையே.
633 வெற்றிக்கருளகொடியான்றன் மீமீதாடாவுலகத்து *
வெற்றவெறிதேபெற்றதாய் வேம்பேயாகவளர்த்தாளே *
குற்றமற்றமுலைதன்னைக் குமரன்கோலப்பணைத்தோளோடு *
அற்றகுற்றமவைதீர அணையவமுக்கிக்கட்டீரே.
634 உள்ளேயுருகிநைவேனை உளளோஇலளோவென்னாத *
கொள்ளைகொள்ளிக்குறும்பனைக் கோவர்த்தனனைக்கண்டக்கால் *
கொள்ளும்பயனொன்றில்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும் *
அள்ளிப்பறித்திட்டவன்மார்விலெறிந்து என்னழலைத்தீர்வேனே.
635 கொம்மைமுலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல் *
இம்மைப்பிறவிசெய்யாதே இனிப்போய்ச்செய்யும்தவந்தானென் *
செம்மையுடையதிருமார்வில் சேர்த்தானேலும்ஒருஞான்று *
மெய்ம்மைசொல்லிமுகம்நோக்கி விடைதான்தருமேல்மிகநன்றே.
636 அல்லல்விளைத்தபெருமானை ஆயர்பாடிக்கணிவிளக்கை *
வில்லிபுதுவைநகர்நம்பி விட்டுசித்தன்வியன்கோதை *
வில்லைத்தொலைத்தபுருவத்தாள் வேட்கையுற்றுமிகவிரும்பும் *
சொல்லைத்துதிக்கவல்லார்கள் துன்பக்கடளுள்துவளாரே. (2)