Adorn Me with the Garland Worn by Kaṇṇaṉ
கண்ணன் சூடிய மாலையை எனக்குச் சூட்டுங்கள்
629 கஞ்சைக்காய்ந்தகருவல்லி கடைக்கணென்னும்சிறைக்கோலால் *
நெஞ்சூடுருவவேவுண்டு நிலையும்தளர்ந்துநைவேனை *
அஞ்சேலென்னானவனொருவன் அவன்மார்வணிந்தவனமாலை *
வஞ்சியாதேதருமாகில் மார்வில்கொணர்ந்துபுரட்டீரே.