One Day, Will Kaṇṇaṉ Speak the Truth?
ஒருநாள் கண்ணன் உண்மை சொல்வானா?
635 கொம்மைமுலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல் *
இம்மைப்பிறவிசெய்யாதே இனிப்போய்ச்செய்யும்தவந்தானென் *
செம்மையுடையதிருமார்வில் சேர்த்தானேலும்ஒருஞான்று *
மெய்ம்மைசொல்லிமுகம்நோக்கி விடைதான்தருமேல்மிகநன்றே.