ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார்
– ஓரொருவர்
உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாததன்றோ அது