இருத்து மெண்டானாய்ப் பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய் க்ஷுத் த்ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகிப் பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து என்செய்வ னென்றே யிருந்து அகில பரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும் போகு என்றாலும் அகல்வானு மல்லனாய் போகே லென்றால் உகப்பையுந் தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேச ஸத்பாத்ரம்.