பூண்டநாள் சீர்க் கடலையுட் கொண்டு திருமேனி நன்னிற மொத்து உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து ஜ்ஞாநஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக் கண்டுகந்து பரஸம்ருத்தியே பேறான அன்பு கூருமடியவர் உறையிலிடாதவர் புயற்கை யருள்மாரி குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்.