ஆசறு தூவியென்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதையற்றுத் தாய்வாயி லுண்ணும் பிள்ளைக் கிரைதேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு நல்ல பதத்தையும் வேண்டே னென்னுந் தனிப்பெரும் பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்.