verse 99

ஜந்மாந்தர ஸஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்க் குளித்து ஓதி உருவெண்ணு மந்தி ஐவேள்வி அறுதொழில்களால் மிக்கு ஊன்வாடப் பொருப்பிடைத் தாம் வருந்தித் துன்ப வினைகளை விடுத்து விவேக சமாதிகள் வளர எட்டு நீக்கி எட்டுமிட்டு எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவகார்யம் செய்து உள்ளம் தூயராய் வாரிப் புன்புலவகத்தினுள் இளைப்பினையடைவே விளக்கினைக் கண்டு யோகநீதி நண்ணி அறம் திகழுமறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெரும் சுடரைக் கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய் கனவில் மிக்க தர்சந ஸமமாய் ஆகத்துப் புல்கு மத்யர்த்த ப்ரியமாய் வைகும் சிறப்பு விட்டுக் குற்றேவலென்னாத அநந்ய ப்ரயோஜநமாய் வேதநோபாஸந ஸேவாத்யாநாதிகளென்று சொல்லுமது ஸாத்ய ஸாதந பக்தியாக சாஸ்த்ர ஸித்தம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo