Chapter 10

Āzhvār advises everyone to reach Thirukkannapuram - (மாலை நண்ணி)*

திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்
Bhagavān, cognizant of Āzhvār’s heart yearning to attain Him, consoles saying, “Āzhveer! Why are you mourning that you haven’t attained me yet? I am the one who feels incomplete without you! I have left paramapadham for you and taken residence in Thirukkannapuram. I will grant your wish at the end of this birth.” Pacified by Bhagavān’s words, Āzhvār expresses his happiness felt in this chapter.
பகவானைப் பெறவேண்டும் என்கிற மனோரதம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இருப்பதைப் பகவான் அறிந்தான். “ஆழ்வீர்! என்னை அடையவில்லையே என்று நீர் ஏன் கவலையுறுகிறீர்! உம்மையடையாமல் குறைபடுகிறவன் நானே! உமக்காகவே பரமபதத்தை விட்டுத் திருக்கண்ணபுரத்திற்கு வந்து இருக்கிறேன். இந்த சரீரத்தின் முடிவில் + Read more
Verses: 3772 to 3782
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will have their karma removed
  • TVM 9.10.1
    3772 ## மாலை நண்ணித் * தொழுது எழுமினோ வினை கெட *
    காலை மாலை * கமல மலர் இட்டு நீர் **
    வேலை மோதும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து *
    ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் * அடி இணைகளே (1)
  • TVM 9.10.2
    3773 கள் அவிழும் மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் *
    நள்ளி சேரும் வயல் சூழ் * கிடங்கின் புடை **
    வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் * திருக் கண்ணபுரம் *
    உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)
  • TVM 9.10.3
    3774 தொண்டர் நும் தம் * துயர் போக நீர் ஏகமாய் *
    விண்டு வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
    வண்டு பாடும் பொழில் சூழ் * திருக்கண்ணபுரத்து
    அண்ட வாணன் * அமரர் பெருமானையே (3)
  • TVM 9.10.4
    3775 மானை நோக்கி * மடப் பின்னை தன் கேள்வனை *
    தேனை வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
    வானை உந்தும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரம் *
    தான் நயந்த பெருமான் * சரண் ஆகுமே (4)
  • TVM 9.10.5
    3776 சரணம் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
    மரணம் ஆனால் * வைகுந்தம் கொடுக்கும் பிரான் **
    அரண் அமைந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்
    தரணியாளன் * தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)
  • TVM 9.10.6
    3777 அன்பன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
    செம் பொன் ஆகத்து ** அவுணன் உடல் கீண்டவன்
    நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து
    அன்பன் * நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)
  • TVM 9.10.7
    3778 மெய்யன் ஆகும் * விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் *
    பொய்யன் ஆகும் * புறமே தொழுவார்க்கு எல்லாம் **
    செய்யில் வாளை உகளும் * திருக்கண்ணபுரத்து
    ஐயன் * ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)
  • TVM 9.10.8
    3779 அணியன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
    பிணியும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
    மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணரம்
    பணிமின் * நாளும் பரமேட்டி தன் பாதமே (8)
  • TVM 9.10.9
    3780 பாதம் நாளும் * பணியத் தணியும் பிணி *
    ஏதம் சாரா * எனக்கேல் இனி என்குறை? **
    வேத நாவர் விரும்பும் * திருக்கண்ணபுரத்து
    ஆதியானை * அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)
  • TVM 9.10.10
    3781 இல்லை அல்லல் * எனக்கேல் இனி என் குறை? *
    அல்லி மாதர் அமரும் * திருமார்பினன் **
    கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரம்
    சொல்ல * நாளும் துயர் பாடு சாராவே (10)
  • TVM 9.10.11
    3782 ## பாடு சாரா * வினை பற்று அற வேண்டுவீர் *
    மாடம் நீடு * குருகூர்ச் சடகோபன் ** சொல்
    பாடலான தமிழ் * ஆயிரத்துள் இப்பத்தும்
    பாடி ஆடி * பணிமின் அவன் தாள்களே (11)