My Mind Has Reached the Flower-like Feet of Kaṇṇaṉ.
என் மனம் கண்ணனின் மலர்ப்பாதம் அடைந்துவிட்டது
3583 என்னுடை நன்னுதல்நங்கைமீர்காள்!
யானினிச்செய்வதென்? என்நெஞ்சுஎன்னை *
நின்னிடையேனல்லேனென்றுநீங்கி
நேமியும்சங்குமிருகைக்கொண்டு *
பன்னெடுஞ்சூழ்சுடர்ஞாயிற்றோடு
பான்மதியேந்தி, ஓர்கோலநீல *
நன்னெடுங்குன்றம்வருவதொப்பான்
நாள்மலர்ப்பாதமடைந்ததுவே.