TP 1.10

Nārāyaṇa is the Meritorious One Who Grants the Paṟai

பறைதரும் புண்ணியன் நாராயணன்

Image 1

483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்! *

மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் *

நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால் *

போற்றப்பறைதரும் புண்ணியனால் * பண்டொருநாள்

கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் *

தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? *

ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *

தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.

Text size