Nārāyaṇa is the Meritorious One Who Grants the Paṟai
பறைதரும் புண்ணியன் நாராயணன்

483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்! *
மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் *
நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால் *
போற்றப்பறைதரும் புண்ணியனால் * பண்டொருநாள்
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் *
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? *
ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.