TCV 82

பற்றற்ற பக்தர்களுக்கு எங்கும் இன்பம்

833 எத்திறத்துமொத்துநின்று உயர்ந்துயர்ந்தபெற்றியோய்! *
முத்திறத்துமூரிநீர் அராவணைத்துயின்ற * நின்
பத்துறுத்தசிந்தையோடுநின்று, பாசம்விட்டவர்க்கு *
எத்திறத்துமின்பம் இங்குமங்குமெங்குமாகுமே.
833 ĕttiṟattum ŏttu niṉṟu * uyarntu uyarnta pĕṟṟiyoy *
muttiṟattu mūri nīr * arāvaṇait tuyiṉṟa ** niṉ
pattu uṟutta cintaiyoṭu * niṉṟu pācam viṭṭavarkku *
ĕttiṟattum iṉpam * iṅkum aṅkum ĕṅkum ākume (82)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

833. You who rest on the snake bed on the ocean, the highest of the high, are the incomparable one whom no one can know. If devotees have destroyed their desires and released themselves from attachment to the world, they will receive happiness here, there and everywhere in all ways.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எத்திறத்தும் தேவ மனித விலங்கு ஆகிய ஜாதியிலும்; ஒத்து நின்று ஒத்தவிதம் அவதரித்து; உயர்ந்து உயர்ந்த குணவிசேஷத்தால் உயர்ந்த; பெற்றியோய்! தன்மையுடையவனே!; முத்திறத்து ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர்; மூரி நீர் என்ற மூவகை நீர்; அராவணைத் நிறைந்த பாற்கடலிலே; துயின்ற பாம்புப் படுக்கையில் சயனித்திருக்கும்; நின் பத்து உறுத்த உன்னிடத்தில் பக்தியோடு கூடின; சிந்தையோடு மனத்துடன்; நின்று பாசம் பற்று பாசங்களை; விட்டவர்க்கு விட்டவர்களுக்கு; எத்திறத்தும் இன்பம் இகலோக பரலோக இன்பம்; இங்கும் அங்கும் எல்லா இடத்திலும்; எங்கும் ஆகுமே கிட்டும்

Āchārya Vyākyānam

82 பாட்டு –அவதாரிகை –

இதுக்கு முன்பு பரோபதேசம் பண்ணினாராய் -மேல்- ஈஸ்வரனைக் குறித்து – தேவரீர் திருவடிகளிலே ப்ரேம உக்தர் நித்ய ஸூகிகள் -என்கிறார் இதுக்கு அடி –

பிறருக்கு சாதகமாக தான் உபதேசித்த பக்தி -தமக்கு ஸ்வயம் பிரயோஜனம்-யாகையாலே -தமக்கு ரசித்த படியைப் பேசுகிறார் – இப்பரபக்தி தான் -சாதகனுக்கு உபாயத்தின் மேல் எல்லையாய் பிரபன்னனுக்கு ப்ராப்யத்திலே முதல்

+ Read more