O Rāmāṉuja! How Did Your Grace Grow Within Me?
இராமானுச! நின்னருள் என்னிடம் எப்படி வளர்ந்தது?
3994 நையும்மனம் உன்குணங்களையுன்னி * என்நாவிருந்துஎம்
ஐயனிராமானுச னென்றழைக்கும் * அருவினையேன்
கையுந்தொழும் கண்கருதிடும் காணக் கடல்புடைசூழ்
வையமிதனில் * உன்வண்மை என்பாலென் வளர்ந்ததுவே?