Chapter 2

Thirunaraiyur 9 - (புள் ஆய்)

திருநறையூர் 9
Thirunaraiyur 9 - (புள் ஆய்)

The āzhvār joyfully expresses his deep attachment and devotion towards Thirunaraiyur Nambi in these verses.


In the preceding chapter of his divine compositions, the revered Tirumaṅgai Āzhvār eloquently explained how he was graciously blessed with the supreme knowledge of his eternal and inseparable relationship with Bhagavān. Yet, despite this

+ Read more

திருநறையூர் நம்பியின்பால் தமக்குள்ள ஆழ்ந்த பற்றினை ஈண்டுப் பரக்கக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார்.

Verses: 1558 to 1567
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
  • PT 7.2.1
    1558 ## புள் ஆய் ஏனமும் ஆய்ப் புகுந்து * என்னை உள்ளம் கொண்ட *
    கள்வா என்றலும் * என் கண்கள் நீர்கள் சோர்தருமால் **
    உள்ளே நின்று உருகி * நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் *
    நள்ளேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 1
  • PT 7.2.2
    1559 ஓடா ஆள் அரியின் * உரு ஆய் மருவி * என் தன்
    மாடே வந்து * அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா **
    பாடேன் தொண்டர் தம்மைக் * கவிதைப் பனுவல் கொண்டு *
    நாடேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 2
  • PT 7.2.3
    1560 எம்மானும் எம் அனையும் * என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் *
    அம்மானும் அம்மனையும் * அடியேனுக்கு ஆகி நின்ற **
    நல் மான ஒண் சுடரே * நறையூர் நின்ற நம்பீ * உன்
    மைம் மான வண்ணம் அல்லால் * மகிழ்ந்து ஏத்தமாட்டேனே 3
  • PT 7.2.4
    1561 சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் * உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
    உறைவாய் * என் நெஞ்சின் உள்ளே * உறைவாய் உறைந்தது தான் **
    அறியாது இருந்தறியேன் * அடியேன் அணி வண்டு கிண்டும் *
    நறை வாரும் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பீயோ 4
  • PT 7.2.5
    1562 நீண்டாயை வானவர்கள் * நினைந்து ஏத்திக் காண்பு அரிதால் *
    ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு * நான் அடிமை
    பூண்டேன் ** என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
    நாண் தான் உனக்கு ஒழிந்தேன் * நறையூர் நின்ற நம்பீயோ 5
  • PT 7.2.6
    1563 எம் தாதை தாதை அப்பால் * எழுவர் பழ அடிமை
    வந்தார் * என் நெஞ்சின் உள்ளே * வந்தாயைப் போகல் ஒட்டேன் **
    அந்தோ! என் ஆர் உயிரே * அரசே அருள் எனக்கு *
    நந்தாமல் தந்த எந்தாய்! * நறையூர் நின்ற நம்பீயோ 6
  • PT 7.2.7
    1564 மன் அஞ்ச ஆயிரம் தோள் * மழுவில் துணித்த மைந்தா *
    என் நெஞ்சத்துள் இருந்து * இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் **
    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் * வளைத்து வைத்தேன் *
    நல் நெஞ்ச அன்னம் மன்னும் * நறையூர் நின்ற நம்பீயோ 7
  • PT 7.2.8
    1565 எப்போதும் பொன் மலர் இட்டு * இமையோர் தொழுது * தங்கள்
    கைப்போது கொண்டு இறைஞ்சிக் * கழல்மேல் வணங்க நின்றாய் **
    இப்போது என் நெஞ்சின் உள்ளே * புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
    நல் போது வண்டு கிண்டும் * நறையூர் நின்ற நம்பீயோ 8
  • PT 7.2.9
    1566 ஊன் நேர் ஆக்கை * தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் *
    யான் ஆய் என் தனக்கு ஆய் * அடியேன் மனம் புகுந்த
    தேனே ** தீங் கரும்பின் தெளிவே * என் சிந்தை தன்னால் *
    நானே எய்தப் பெற்றேன் * நறையூர் நின்ற நம்பீயோ 9
  • PT 7.2.10
    1567 ## நல் நீர் வயல் புடை சூழ் * நறையூர் நின்ற நம்பியை *
    கல் நீர மால் வரைத் தோள் * கலிகன்றி மங்கையர் கோன் **
    சொல் நீர சொல் மாலை * சொல்லுவார்கள் சூழ் விசும்பில் *
    நல் நீர்மையால் மகிழ்ந்து * நெடுங் காலம் வாழ்வாரே 10