Chapter 9

Thirunaraiyur 6 - (பெடை அடர்த்த)

திருநறையூர் 6
Thirunaraiyur 6 - (பெடை அடர்த்த)
The āzhvār advises our hearts to seek and attain the divine feet of Thirunambi of Thirunaraiyur.
திருநறையூர்த் திருநம்பியின் திருவடிகளையே அடையும்படி நமது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுகிறார் ஆழ்வார்.
Verses: 1528 to 1537
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
  • PT 6.9.1
    1528 ## பெடை அடர்த்த மட அன்னம் * பிரியாது * மலர்க் கமலம்
    மடல் எடுத்து மது நுகரும் * வயல் உடுத்த திருநறையூர் **
    முடை அடர்த்த சிரம் ஏந்தி * மூவுலகும் பலி திரிவோன் *
    இடர் கெடுத்த திருவாளன் * இணை அடியே அடை நெஞ்சே 1
  • PT 6.9.2
    1529 கழி ஆரும் கன சங்கம் * கலந்து எங்கும் நிறைந்து ஏறி *
    வழி ஆர முத்து ஈன்று * வளம் கொடுக்கும் திருநறையூர் **
    பழி ஆரும் விறல் அரக்கன் * பரு முடிகள் அவை சிதற *
    அழல் ஆரும் சரம் துரந்தான் * அடி இணையே அடை நெஞ்சே 2
  • PT 6.9.3
    1530 சுளை கொண்ட பலங்கனிகள் * தேன் பாய * கதலிகளின்
    திளை கொண்ட பழம் கெழுமு * திகழ் சோலைத் திருநறையூர் **
    வளை கொண்ட வண்ணத்தன் * பின் தோன்றல் * மூவுலகோடு
    அளை வெண்ணெய் உண்டான் தன் * அடி இணையே அடை நெஞ்சே 3
  • PT 6.9.4
    1531 துன்று ஒளித் துகில் படலம் * துன்னி எங்கும் மாளிகைமேல் *
    நின்று ஆர வான் மூடும் * நீள் செல்வத் திருநறையூர் **
    மன்று ஆரக் குடம் ஆடி * வரை எடுத்து மழை தடுத்த *
    குன்று ஆரும் திரள் தோளன் * குரை கழலே அடை நெஞ்சே 4
  • PT 6.9.5
    1532 அகில் குறடும் சந்தனமும் * அம் பொன்னும் அணி முத்தும் *
    மிகக் கொணர்ந்து திரை உந்தும் * வியன் பொன்னித் திருநறையூர் **
    பகல் கரந்த சுடர் ஆழிப் * படையான் இவ் உலகு ஏழும் *
    புகக் கரந்த திரு வயிற்றன் * பொன் அடியே அடை நெஞ்சே 5
  • PT 6.9.6
    1533 பொன் முத்தும் அரி உகிரும் * புழைக் கை மா கரிக் கோடும் *
    மின்னத் தண் திரை உந்தும் * வியன் பொன்னித் திருநறையூர் **
    மின் ஒத்த நுண் மருங்குல் * மெல் இயலை * திரு மார்பில்
    மன்னத் தான் வைத்து உகந்தான் * மலர் அடியே அடை நெஞ்சே 6
  • PT 6.9.7
    1534 சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் * செங் கமலத்து இடை இடையின் *
    பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் * பயன் விளைக்கும் திருநறையூர் **
    கார் தழைத்த திரு உருவன் * கண்ண பிரான் விண்ணவர் கோன் *
    தார் தழைத்த துழாய் முடியன் * தளிர் அடியே அடை நெஞ்சே 7
  • PT 6.9.8
    1535 ## குலை ஆர்ந்த பழுக் காயும் * பசுங் காயும் பாளை முத்தும் *
    தலை ஆர்ந்த இளங் கமுகின் * தடஞ் சோலைத் திருநறையூர் **
    மலை ஆர்ந்த கோலம் சேர் * மணி மாடம் மிக மன்னி *
    நிலை ஆர நின்றான் தன் * நீள் கழலே அடை நெஞ்சே 8
  • PT 6.9.9
    1536 மறை ஆரும் பெரு வேள்விக் * கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் *
    நிறை ஆர வான் மூடும் * நீள் செல்வத் திருநறையூர் **
    பிறை ஆரும் சடையானும் * பிரமனும் முன் தொழுது ஏத்த *
    இறை ஆகி நின்றான் தன் * இணை அடியே அடை நெஞ்சே 9
  • PT 6.9.10
    1537 ## திண் களக மதிள் புடை சூழ் * திருநறையூர் நின்றானை *
    வண் களகம் நிலவு எறிக்கும் * வயல் மங்கை நகராளன் **
    பண்கள் அகம் பயின்ற சீர்ப் * பாடல் இவை பத்தும் வல்லார் *
    விண்கள் அகத்து இமையவர் ஆய் * வீற்றிருந்து வாழ்வாரே 10