Chapter 7

Thiruvarangam 4 - (பண்டை நான்மறையும்)

திருவரங்கம் 4
Thiruvarangam 4 - (பண்டை நான்மறையும்)

These verses also speak of the glories of Lord Ranganatha.


As the sole and ultimate cause of the entire cosmos (jagat-kāraṇa-bhūta), Sriman Nārāyaṇa stands as the supreme refuge even for exalted celestial beings such as Brahmā. It is His inherent nature to be the remover of all sorrows for sentient souls and to rush to the aid of His devotees

+ Read more

ஈண்டுள்ள பாசுரங்களும் திருவரங்கனின் பெருமைகளைக் கூறுகின்றன.

Verses: 1408 to 1417
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 5.7.1
    1408 ## பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் *
    பதங்களும் பதங்களின் பொருளும் *
    பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் *
    பெருகிய புனலொடு நிலனும் **
    கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் *
    ஏழு மா மலைகளும் விசும்பும் *
    அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 1
  • PT 5.7.2
    1409 இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் *
    எண் இல் பல் குணங்களே இயற்ற *
    தந்தையும் தாயும் மக்களும் மிக்க
    சுற்றமும் * சுற்றி நின்று அகலாப்
    பந்தமும் ** பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
    பான்மையும் * பல் உயிர்க்கு எல்லாம் *
    அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 2
  • PT 5.7.3
    1410 மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் *
    வானமும் தானவர் உலகும் *
    துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கித் *
    தொல்லை நான்மறைகளும் மறைய **
    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் *
    பிறங்கு இருள் நிறம் கெட * ஒருநாள்
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 3
  • PT 5.7.4
    1411 மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக *
    மாசுணம் அதனொடும் அளவி *
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப் *
    படு திரை விசும்பிடைப் படர **
    சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் *
    தேவரும் தாம் உடன் திசைப்ப *
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 4
  • PT 5.7.5
    1412 எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்? *
    இரணியன் இலங்கு பூண் அகலம் *
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து *
    பொழிதரும் அருவி ஒத்து இழிய **
    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் *
    விண் உறக் கனல் விழித்து எழுந்தது *
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 5
  • PT 5.7.6
    1413 ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய *
    அடல் புரை எழில் திகழ் திரள் தோள் *
    ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி *
    மற்று அவன் அகல் விசும்பு அணைய **
    ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச *
    அறிதுயில் அலை கடல் நடுவே *
    ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 6
  • PT 5.7.7
    1414 சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த *
    கொடுமையின் கடு விசை அரக்கன் *
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து *
    இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி *
    வரி சிலை வளைய அடு சரம் துரந்து *
    மறி கடல் நெறிபட * மலையால்
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 7
  • PT 5.7.8
    1415 ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் * ஒருகால்
    உடைய தேர் ஒருவன் ஆய் * உலகில்
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து * இலங்கை
    மலங்க அன்று அடு சரம் துரந்து **
    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் *
    பகலவன் ஒளி கெட * பகலே
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 8
  • PT 5.7.9
    1416 பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் * ஒருகால்
    பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
    வாயன் ஆய் * மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
    மணி முடி வானவர் தமக்குச்
    சேயன் ஆய் ** அடியேர்க்கு அணியன் ஆய் வந்து * என்
    சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் *
    ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் *
    அரங்க மா நகர் அமர்ந்தானே 9
  • PT 5.7.10
    1417 ## பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து *
    பொரு திரை மா நதி புடை சூழ்ந்து *
    அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த *
    அரங்க மா நகர் அமர்ந்தானை *
    மன்னு மா மாட மங்கையர் தலைவன் *
    மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
    பன்னிய பனுவல் பாடுவார் * நாளும்
    பழவினை பற்று அறுப்பாரே 10