Your browser does not support the audio element.
audio
1248 போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள் *
தாதுதிரவந்தலைக்கும் தடமண்ணித்தென்கரைமேல் *
மாதவன்றானுறையுமிடம் வயல்நாங்கை * வரிவண்டு
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே. (2)
1249 யாவருமாயாவையுமாய் எழில்வேதப்பொருள்களுமாய் *
மூவருமாய்முதலாய மூர்த்தியமர்ந்துறையுமிடம் *
மாவரும்திண்படைமன்னைவென்றிகொள்வார் மன்னுநாங்கை *
தேவரும்சென்றிறைஞ்சுபொழில் திருத்தேவனார்தொகையே.
1250 வானாடும்மண்ணாடும் மற்றுள்ளபல்லுயிரும் *
தானாய எம்பெருமான் தலைவன்அமர்ந்துஉறையுமிடம் *
ஆனாதபெருஞ்செல்வத்து அருமறையோர்நாங்கை தன்னுள் *
தேனாரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.
1251 இந்திரனும்இமையவரும் முனிவர்களும் எழிலமைந்த *
சந்தமலர்ச்சதுமுகனும் கதிரவனும்சந்திரனும் *
எந்தை! எமக்கருளெனநின்று அருளுமிடம், எழில் நாங்கை *
சுந்தரநற்பொழில்புடைசூழ் திருத்தேவனார்தொகையே.
1252 அண்டமும்இவ்வலைகடலும் அவனிகளும்குலவரையும் *
உண்டபிரான்உறையுமிடம், ஓளிமணிசந்தகில்கனகம் *
தெண்திரைகள்வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல் *
திண்திறலார்பயில்நாங்கைத்திருத்தேவனார்தொகையே.
1253 ஞாலமெல்லாம்அமுதுசெய்து நான்மறையும் தொடராத *
பாலகனாய்ஆலிலையில் பள்ளிகொள்ளும்பரமனிடம் *
சாலிவளம்பெருகிவரும் தடமண்ணித்தென்கரைமேல் *
சேலுகளும்வயல்நாங்கைத் திருத்தேவனார்தொகையே.
1254 ஓடாத வாளரியின் உருவாகிஇரணியனை *
வாடாதவள்ளுகிரால் பிளந்தளைந்தமாலதிடம் *
ஏடேறுபெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சேடேறுபொழில்தழுவு திருத்தேவனார்தொகையே.
1255 வாராருமிளங்கொங்கை மைதிலியைமணம்புணர்வான் *
காரார்திண்சிலையிறுத்த தனிக்காளைகருதுமிடம்
ஏராரும்பெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சீராரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.
1256 கும்பமிகுமதயானை பாகனொடும்குலைந்துவிழ *
கொம்பதனைப்பறித்தெறிந்த கூத்தனமர்ந்துறையுமிடம் *
வம்பவிழும்செண்பகத்தின் மணங்கமழும்நாங்கை தன்னுள் *
செம்பொன்மதிள்பொழில்புடைசூழ் திருத்தேவனார்தொகையே.
1257 காரார்ந்ததிருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம் *
சீரார்ந்தபொழில்நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல் *
கூரார்ந்தவேற்கலியன்கூறுதமிழ்பத்தும்வல்லார் *
ஏரார்ந்தவைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2)