PT 10.6.7

ஸ்ரீராமனா கட்டுண்டிருந்தவன்!

1904 படைத்திட்டதுஇவ்வையம்உய்யமுனநாள்
பணிந்தேத்தவல்லார்துயராயவெல்லாம் *
துடைத்திட்டுஅவரைத்தனக்காக்கவென்னத்
தெளியாஅரக்கர்திறல்போயவிய *
மிடைத்திட்டெழுந்தகுரங்கைப்படையா
விலங்கல்புகப்பாய்ச்சிவிம்ம * கடலை
அடைத்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1904 paṭaittiṭṭu atu iv vaiyam uyya muṉa nāl̤ *
paṇintu etta vallār tuyar āya ĕllām *
tuṭaittiṭṭu avarait taṉakku ākka ĕṉṉat *
tĕl̤iyā arakkar tiṟal poy aviya **
miṭaittiṭṭu ĕzhunta kuraṅkaip paṭaiyā *
vilaṅkal pukap pāycci vimma * kaṭalai
aṭaittiṭṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-7

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1904. Our lord, the creator of the world who removes the sorrows of his devotees if they worship him gathered a monkey army, built a bridge over the ocean with stones, crossed it and destroyed his enemies in Lankā because the Rakshasās did not understand his strength. See, now he has stolen the butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
முன நாள் முன்பு பிரளய காலத்தில்; இவ்வையம் இவ்வுலகங்களை; படைத்திட்டு படைத்து; அது உய்ய அது உய்ய; பணிந்து விழுந்து வணங்கி; ஏத்த வல்லார் துதிக்கும் பக்தர்களின்; துயர் ஆய துயரங்களை; எல்லாம் எல்லாம்; துடைத்திட்டு துடைத்து போக்கி; அவரைத் அவர்களை; தனக்கு தன் தொண்டர்களாக; ஆக்க ஆக்கிக் கொள்ள; என்ன நினைத்தவனை; தெளியா இதை அறியாத; அரக்கர் திறல் அரக்கர்களின் மிடுக்கு; போய் அவிய அழியும்படி; மிடைத்திட்டு எழுந்த திரண்டு எழுந்த; குரங்கைப் வானர வீரர்களை; படையா படையாகக் கொண்டு; விம்ம கடலை கடல் நிறையும்படி; விலங்கல் புக மலைகளை; பாய்ச்சி பரப்பி கடலை; அடைத்திட்டவன் தூர்த்தவனான; காண்மின் பெருமானை பாருங்கள்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!

Āchārya Vyākyānam

(கீழ் பாட்டில் பரசுராமன் அதிலும் விஞ்சின அதி மானுஷ சேஷ்டிதங்கள் கொண்ட சக்கரவர்த்தி திரு மகன் சீல வ்ருத்த வேஷங்கள் அதி விக்ரம பிரதாபம் -அதி லிங்கித சர்வ லோக சாம்யம் – வைஷ்ணவ வைபவ அவதாரம் -கூரத்தாழ்வான் அத்தை அனுபவித்து வித்தாராகிறார் இதில் )

படைத்திட்டது இவ் வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல்

+ Read more