O My Mother! I Have Reached Your Holy Feet.
எந்தாய்! உன் திருவடியைச் சேர்ந்துவிட்டேன்
1005 ஏவினார்கலியார்நலிகவென்று என்மேல்
எங்ஙனேவாழுமாறு? * ஐவர்
கோவினார் செய்யும்கொடுமையைமடித்தேன்
குறுங்குடிநெடுங்கடல்வண்ணா! *
பாவினாரின்சொல் பன்மலர்கொண்டு உன்
பாதமேபரவிநான் பணிந்து * என்
நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்! (2)