Your browser does not support the audio element.
audio
677 ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன் *
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லால் *
கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து *
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. (2)
678 ஆனாதசெல்வத்து அரம்பையர்கள்தற்சூழ *
வானாளும்செல்வமும் மண்ணரசும்யான்வேண்டேன் *
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் *
மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே.
679 பின்னிட்டசடையானும் பிரமனும்இந்திரனும் *
துன்னிட்டுப்புகலரிய வைகுந்தநீள்வாசல் *
மின்வட்டச்சுடராழி வேங்கடக்கோன்தானுமிழும் *
பொன்வட்டில்பிடித்து உடனேபுகப்பெறுவேனாவேனே.
680 ஒண்பவளவேலையுலவு தண்பாற்கடலுள் *
கண்துயிலும்மாயோன் கழலிணைகள்காண்பதற்கு *
பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும்வேங்கடத்து *
செண்பகமாய்நிற்கும் திருவுடையேனாவேனே.
681 கம்பமதயானைக் கழுத்தகத்தின்மேலிருந்து *
இன்பமரும்செல்வமும் இவ்வரசும்யான்வேண்டேன் *
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலைமேல் *
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே.
682 மின்னனையநுண்ணிடையார் உருப்பசியும்மேனகையும் *
அன்னவர்தம்பாடலொடும் ஆடலவையாதரியேன் *
தென்னவெனவண்டினங்கள் பண்பாடும்வேங்கடத்துள் *
அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவனே.
683 வானாளும்மாமதிபோல் வெண்குடைக்கீழ் * மன்னவர்தம்
கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் *
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல் *
கானாறாய்ப்பாயும் கருத்துடையேனாவேனே.
684 பிறையேறுசடையானும் பிரமனுமிந்திரனும் *
முறையாயபெருவேள்விக் குறைமுடிப்பான்மறையானான் *
வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல் *
நெறியாய்க்கிடக்கும் நிலையுடையேனாவேனே.
685 செடியாயவல்வினைகள் தீர்க்கும்திருமாலே! *
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாசல் *
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய்காண்பேனே. (2)
686 உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் * உருப்பசிதன்
அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன் *
செம்பவளவாயான் திருவேங்கடமென்னும் *
எம்பெருமான்பொன்மலைமேல் ஏதேனுமாவேனே.
687 மன்னியதண்சாரல் வடவேங்கடத்தான்தன் *
பொன்னியலும்சேவடிகள்காண்பான் புரிந்திறைஞ்சி *
கொன்னவிலும்கூர்வேல் குலசேகரன்சொன்ன *
பன்னியநூல்தமிழ்வல்லார் பாங்காயபத்தர்களே.