229 மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு
வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி *
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச்
சுற்றும்தொழநின்றசோதி! *
பொருட்டாயமிலேன்எம்பெருமான்!
உன்னைப்பெற்றகுற்றமல்லால் * மற்றிங்கு
அரட்டா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.