உய்ய நினைவுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர்
– மெய் உரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கை இலங்கு நெல்லிக் கனி