முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில்
– அந்தோ
திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குருவார் இக்காலம் நெஞ்சே கூறு