மற்றை உபாயங்கள் ஸாத்யங்களாகையாலே, ஸ்வரூபஸித்தியில் சேதநனை அபேக்ஷித்திருக்கும்; அசேதநங்களுமாய், அசக்தங்களுமாயிருக்கையாலே கார்ய ஸித்தியில் ஈச்வரனை அபேக்ஷித்திருக்கும். இந்த உபாயம் அவற்றுக்கு எதிர்த்தட்டாயிருக்கையாலே, இதர நிரபேக்ஷமாயிருக்கும்.