verse 104

பெரும்பாழில் சேஷத்ரஜ்ஞன் பெரும்செய் கலியாரேவ ஆளும் வன்குறும்பர் குடியேறிப் பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்குக் காவல் செய்து குமைத்துத் திரித்து வீழ்த்தி வலித்தெற்றி அருவி யறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதியானவாறே தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி ஒள்வாளுருவி வினைத்தூற்றை வேரறுவித்துத் தீக்கொளீஇக் கவ்வை யெருவிட்டு அமுதவாறுதலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல் வித்தி எழு நாற்றுக்களையையும் வேர் முதல் மாய்த்துப் பட்டிச்சேவதக்கி மீது கொள்ளாமல் குறிக்கொள்வித்துக் கடல் புரைய விளைந்து தலைவணக்கினவாறே நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்துப் போர்த்த தோல்

விடுத்து ஸூக்ஷ்ம வொட்டும் நீரிலே கழுவி வேறோர் கலத்திட்டுப் பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்குண ரஸாந்நமாக்கி வானோர்க்கு ஆராவமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தியுழவன் க்ருஷி பலமிறே.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo