"The Heroine, Unable to Bear Separation, Laments with a Broken Heart, Thinking of the Hero's Strength."
பிரிவாற்றாத தலைவி, தலைவனது ஆற்றலைக் கருதி, நெஞ்சழிந்து இரங்கல்
2555 நலியும்நரகனை வீட்டிற்றும் * வாணன் திண்தோள்துணித்த
வலியும் பெருமையும்யான் சொல்லும் நீர்த்தல்ல * மைவரைபோல்
பொலியுமுருவிற்பிரானார்புனை பூந்துழாய் மலர்க்கே
மெலியும்மடநெஞ்சினார் * தந்துபோயினவேதனையே.