The Friend, Seeing the Heroine's Inability to Endure, Speaks in Scorn of the Hero.
தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்துக் கூறல்
2510 அருளார்திருச்சக்கரத்தால் அகல்விசும்பும்நிலனும் *
இருளார்வினைகெடச் செங்கோல்நடாவுதிர் * ஈங்கோர் பெண்பால்
பொருளோவெனுமிகழ்வோ? இவற்றின் புறத்தாளென்றெண்ணோ
தெருளோம்அரவணையீர்! * இவள்மாமைசிதைக்கின்றதே.