The Holy Feet of the Lord of Tirucceṅkuṉṟūr are My Protection.
திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குக் காவல்
3599 பிறிதில்லையெனக்குப்பெரியமூவுலகும்
நிறையப் பேருருவமாய்நிமிர்ந்த *
குறியமாணெம்மான்குரைகடல்கடைந்த
கோலமாணிக்கம்என்னம்மான் *
செறிகுலைவாழைகமுகுதெங்கணிசூழ்
திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு
அறிய * மெய்ம்மையேநின்ற எம்பெருமான்
அடியிணையல்லதோரரணே.