The Holy Feet of the Lord of Tirucceṅkuṉṟūr are My Refuge.
திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குச் சரண்
3598 என்னமர்பெருமான்இமையவர்பெருமான்
இருநிலமிடந்தஎம்பெருமான் *
முன்னைவல்வினைகள்முழுதுடன்மாள
என்னையாள்கின்றஎம்பெருமான் *
தென்திசைக்கணிகொள்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறங்கரைமீபால்
நின்றஎம்பெருமான் * அடியல்லால் சரண்
நினைப்பிலும் பிறிதில்லையெனக்கே.