For the One Supreme Lord, My Songs are Garments and Ornaments
ஏக மூர்த்திக்கு ஆடையும் அணிகலனும் என் பாடல்களே
3146 பூசுஞ்சாந்துஎன்னெஞ்சமே புனையுங்கண்ணிஎனதுடைய *
வாசகம்செய்மாலையே வான்பட்டாடையும்அஃதே *
தேசமானவணிகலனும் என்கைகூப்புச்செய்கையே *
ஈசன்ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேகமூர்த்திக்கே.