If One Does Not Praise Kaṇṇaṉ, There is No Benefit.
கண்ணனைத் துதியாவிடில் பயனேயில்லை
3057 மொய்ம்மாம்பூம்பொழில்பொய்கை முதலைச் சிறைப்பட்டுநின்ற *
கைம்மாவுக்கருள்செய்த கார்முகில்போல்வண்ணன் கண்ணன் *
எம்மானைச்சொல்லிப்பாடி எழுந்தும்பரந்தும்துள்ளாதார்
தம்மால் * கருமமென்? சொல்லீர் தண்கடல்வட்டத்துள்ளீரே? (2)