If One Reaches Tiruvaṉantapuram, Karma Will Be Dispelled.
திருவனந்தபுரம் சேர்ந்தால் வினை தீரும்
3796 ஊரும்புட்கொடியுமஃதே உலகெல்லாமுண்டுமிழ்ந்தான் *
சேரும்தண்ணனந்தபுரம் சிக்கெனப்புகுதிராகில் *
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணம்நாம்அறியச் சொன்னோம் *
பேருமோராயிரத்துள் ஒன்றுநீர்பேசுமினே.