Grant the Paṟai; We Shall Receive Our Reward.
பறைதருக; யாங்கள் சன்மானம் பெறுவோம்

500 கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! * உன்தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம் *
நாடுபுகழும் பரிசினால்நன்றாக *
சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே *
பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம் *
ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு *
மூடநெய்பெய்து முழங்கைவழிவார *
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2)