O Great Lord! Grant Us the Paṟai.
நெடுமாலே! பறை தருதி

498 ஒருத்திமகனாய்ப்பிறந்து * ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளர *
தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த *
கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் *
நெருப்பென்னநின்ற நெடுமாலே! * உன்னை
அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில் *
திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி *
வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.