TP 3.25

O Great Lord! Grant Us the Paṟai.

நெடுமாலே! பறை தருதி

Image 1

498 ஒருத்திமகனாய்ப்பிறந்து * ஓரிரவில்

ஒருத்திமகனாய் ஒளித்துவளர *

தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த *

கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் *

நெருப்பென்னநின்ற நெடுமாலே! * உன்னை

அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில் *

திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி *

வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

Text size