You Too Must Come and Sing of the Wondrous Lord
நீயும் வந்து மாயனைப்பாடு

488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ? *
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றேன் *
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும் *
வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக *
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை *
எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் *
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க
வல்லானை * மாயனைப் பாடேலோரெம்பாவாய்.