Chapter 4

Thiruppullāni 2 - (கா ஆர்)

திருப்புல்லாணி 2
Thiruppullāni 2 - (கா ஆர்)
In the temple precincts, Lord Rama is seen in a reclining posture on Darbha grass, which is why this place is also known as Darbha Sayana. Located in Pullani, it is referred to as Darbha Sayana Kshetram. The presiding deity here is known by the names Deivaseliyan and Kalyana Jagannathan. The Thayar is Kalyanavalli. The āzhvār calls upon his heart to + Read more
கோயில் பிராகாரத்தில் ஸ்ரீ இராமபிரான் தர்ப்பையில் சயனக் கோலத்தில் காட்சி தரும் இத்தலம் தர்ப்ப சயனம் என்றும் அழைக்கப்படும். புல்லாணி-தர்ப்ப சயனம். இங்கே எழுந்தருளியுள்ள பெருமான் தெய்வச்சிலையான், கல்யாண ஜகந்நாதன் என்னும் பெயர்களைக் கொண்டவர். தாயாரின் பெயர் கல்யாணவல்லி. திருப்புல்லாணிப் + Read more
Verses: 1778 to 1787
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 9.4.1
    1778 ## கா ஆர் மடல் பெண்ணை * அன்றில் அரிகுரலும் *
    ஏ வாயினூடு இயங்கும் * எஃகின் கொடிதாலோ **
    பூ ஆர் மணம் கமழும் * புல்லாணி கைதொழுதேன் *
    பாவாய் இது நமக்கு ஓர் * பான்மையே ஆகாதே? 1
  • PT 9.4.2
    1779 முன்னம் குறள் உரு ஆய் * மூவடி மண் கொண்டு அளந்த *
    மன்னன் சரிதைக்கே * மால் ஆகி பொன் பயந்தேன் **
    பொன்னம் கழிக் கானல் * புள் இனங்காள் புல்லாணி *
    அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு * ஆங்கு இதனைச் செப்புமினே 2
  • PT 9.4.3
    1780 வவ்வித் துழாய் அதன்மேல் * சென்ற தனி நெஞ்சம் *
    செவ்வி அறியாது * நிற்கும்கொல்? நித்திலங்கள் **
    பவ்வத் திரை உலவு * புல்லாணி கைதொழுதேன் *
    தெய்வச் சிலையாற்கு * என் சிந்தை நோய் செப்புமினே 3
  • PT 9.4.4
    1781 பரிய இரணியனது ஆகம் * அணி உகிரால் *
    அரி உரு ஆய்க் கீண்டான் * அருள் தந்தவா நமக்கு **
    பொரு திரைகள் போந்து உலவு * புல்லாணி கைதொழுதேன் *
    அரி மலர்க் கண் நீர் ததும்ப * அம் துகிலும் நில்லாவே 4
  • PT 9.4.5
    1782 வில்லால் இலங்கை மலங்கச் * சரம் துரந்த *
    வல்லாளன் பின் போன * நெஞ்சம் வரும் அளவும் **
    எல்லாரும் என் தன்னை * ஏசிலும் பேசிடினும் *
    புல்லாணி எம் பெருமான் * பொய் கேட்டு இருந்தேனே 5
  • PT 9.4.6
    1783 சுழன்று இலங்கு வெம் கதிரோன் * தேரோடும் போய் மறைந்தான் *
    அழன்று கொடிது ஆகி * அம் சுடரில் தான் அடுமால் **
    செழுந் தடம் பூஞ்சோலை சூழ் * புல்லாணி கைதொழுதேன் *
    இழந்திருந்தேன் என் தன் * எழில் நிறமும் சங்குமே 6
  • PT 9.4.7
    1784 கனை ஆர் இடி குரலின் * கார் மணியின் நா ஆடல் *
    தினையேனும் நில்லாது * தீயில் கொடிதாலோ **
    புனை ஆர் மணி மாடப் * புல்லாணி கைதொழுதேன் *
    வினையேன்மேல் வேலையும் * வெம் தழலே வீசுமே 7
  • PT 9.4.8
    1785 தூம்பு உடைக் கை வேழம் * வெருவ மருப்பு ஒசித்த *
    பாம்பின் அணையான் * அருள்தந்தவா நமக்கு **
    பூஞ் செருந்தி பொன் சொரியும் * புல்லாணி கைதொழுதேன் *
    தேம்பல் இளம் பிறையும் * என் தனக்கு ஓர் வெம் தழலே 8
  • PT 9.4.9
    1786 வேதமும் வேள்வியும் * விண்ணும் இரு சுடரும் *
    ஆதியும் ஆனான் * அருள்தந்தவா நமக்கு **
    போது அலரும் புன்னை சூழ் * புல்லாணி கைதொழுதேன் *
    ஓதமும் நானும் * உறங்காது இருந்தேனே 9
  • PT 9.4.10
    1787 ## பொன் அலரும் புன்னை சூழ் * புல்லாணி அம்மானை *
    மின் இடையார் வேட்கை நோய் கூர * இருந்ததனை **
    கல் நவிலும் திண் தோள் * கலியன் ஒலிவல்லார் *
    மன்னவர் ஆய் மண் ஆண்டு * வான் நாடும் முன்னுவரே 10