He is the One Who Took the Varāha Incarnation
வராகாவதாரம் எடுத்தவன் இவனே
1621 சிலம்புமுதல்கலனணிந்தோர்செங்கண்குன்றம்
திகழ்ந்ததெனத்திருவுருவம்பன்றியாகி *
இலங்குபுவிமடந்தைதனை இடந்துபுல்கி
எயிற்றிடைவைத்தருளியஎம்மீசன்காண்மின் *
புலம்புசிறைவண்டொலிப்பப்பூகம்தொக்க
பொழில்கள்தொறும்குயில்கூவமயில்களால *
அலம்புதிரைப்புனல்புடைசூழ்ந்துஅழகார் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.