ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திக்க இனிமை என்ன எவ்வாறு இந்நிலை பெற்றீர் என்ன ஆபத் ரக்ஷணாதி சேஷ்டிதங்களில் ஈடு பட்டு திருவடியே துணை என்று இருந்தேன் திருவடி ஸ்தானம் தானே பாகவதர் நெஞ்சும் கண்ணும் இவர்களுக்கே அற்றுத் தீர்ந்தது –
பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான்