O He Who Slumbered on the Banyan Leaf! Bestow Grace.
ஆலிலையில் கண்வளர்ந்தவனே! அருள் செய்
1451 நிலவொடுவெயில்நிலவிருசுடரும்
உலகமும்உயிரும் உண்டுஒருகால் *
கலைதருகுழவியின்உருவினையாய்
அலைகடல்ஆலிலைவளர்ந்தவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!