PT 5.10.1

The City of the Lord Who Ate Curds is Nantipura Viṇṇakaram

தயிருண்டநாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்

1438 தீதறுநிலத்தொடுஎரிகாலினொடு நீர்க்கெழுவிசும்புமவையாய் *

மாசறுமனத்தினொடுஉறக்கமொடிறக்கை யவையாயபெருமான் *

தாய்செறஉளைந்துதயிருண்டுகுடமாடு தடமார்வர், தகைசேர் *

நாதன்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம்நண்ணுமனமே! (2)

Text size