The Abode of the Giver of Nectar is Tiruvallikkēṇi
அமுதமளித்தவன் வாழும் இடம் திருவல்லிக்கேணி
1070 வஞ்சனைசெய்யத் தாயுருவாகி
வந்தபேய்அலறிமண்சேர *
நஞ்சமர்முலையூடு உயிர்செகவுண்ட
நாதனைத் தானவர்கூற்றை *
விஞ்சைவானவர் சாரணர்சித்தர்
வியந்துதுதிசெய்யப்பெண்ணுருவாகி *
அஞ்சுவையமுதம்அன்று அளித்தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.