Think of the Lord of Vēṅkaṭam; Vaikuṇṭham Will Be Attained
வேங்கடவனை நினை; வைகுந்தம் கிடைக்கும்
1051 பாவியாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டுதொண்டு செய்தாரை * மண்மிசை
மேவிஆட்கொண்டுபோய் விசும்பேறவைக்கும்எந்தை *
கோவிநாயகன்கொண்டலுந்துயர் வேங்கடமலையாண்டு * வானவர்
ஆவியாயிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.