Chapter 7

Stating that those parts of the body that are not dedicated to Him are worthless - (நீள் நாகம்)

எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்
Stating that those parts of the body that are not dedicated to Him are worthless - (நீள் நாகம்)
The āzhvār says that the senses, such as eyes that do not see Krishna, are useless. The Lord, who has given us ears, mouth, and other organs, is to be experienced and worshipped. The āzhvār emphasizes that the organs of those who do not experience the divine acts of the Lord are essentially non-functional, asserting that their true purpose is fulfilled only in the devotion and service to the Lord.
கண்ணனைக் காணாக் கண் முதலியன பயனில்லை எனல். செவி வாய் முதலிய உறுப்புகளையெல்லாம் கொடுத்தவன் எம்பெருமான். பகவானின் செயல்களை அநுபவிக்காதவர்களின் உறுப்புகள், உறுப்புகளே அல்ல என்கிறார் ஆழ்வார்.
Verses: 2012 to 2021
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 11.7.1
    2012 ## நீள் நாகம் சுற்றி * நெடு வரை நட்டு * ஆழ் கடலைப்
    பேணான் கடைந்து * அமுதம் கொண்டு உகந்த பெம்மானை **
    பூண் ஆர மார்வனைப் * புள் ஊரும் பொன் மலையை *
    காணாதார் கண் என்றும் * கண் அல்ல கண்டாமே 1
  • PT 11.7.2
    2013 நீள்வான் குறள் உரு ஆய் * நின்று இரந்து மாவலி மண் *
    தாளால் அளவிட்ட * தக்கணைக்கு மிக்கானை **
    தோளாத மா மணியைத் * தொண்டர்க்கு இனியானை *
    கேளாச் செவிகள் * செவி அல்ல கேட்டாமே 2
  • PT 11.7.3
    2014 தூயானைத் * தூய மறையானை * தென் ஆலி
    மேயானை * மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
    வாயானை ** மாலை வணங்கி * அவன் பெருமை
    பேசாதார் * பேச்சு என்றும் * பேச்சு அல்ல கேட்டாமே 3
  • PT 11.7.4
    2015 கூடா இரணியனைக் * கூர் உகிரால் மார்வு இடந்த *
    ஓடா அடல் அரியை * உம்பரார் கோமானை **
    தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை * ஆர்வத்தால்
    பாடாதார் பாட்டு என்றும் * பாட்டு அல்ல கேட்டாமே 4
  • PT 11.7.5
    2016 மை ஆர் கடலும் * மணி வரையும் மா முகிலும் *
    கொய் ஆர் குவளையும் காயாவும் * போன்று இருண்ட
    மெய்யானை * மெய்ய மலையானைச் * சங்கு ஏந்தும்
    கையானை * கை தொழா * கை அல்ல கண்டாமே 5
  • PT 11.7.6
    2017 கள் ஆர் துழாயும் * கணவலரும் கூவிளையும் *
    முள் ஆர் முளரியும் * ஆம்பலும் முன் கண்டக்கால் **
    புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் * புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று *
    உள்ளாதார் உள்ளத்தை * உள்ளமாக் கொள்ளோமே 6
  • PT 11.7.7
    2018 கனை ஆர் கடலும் * கருவிளையும் காயாவும் *
    அனையானை * அன்பினால் ஆர்வத்தால் * என்றும்
    சுனை ஆர் மலர் இட்டுத் * தொண்டராய் நின்று *
    நினையாதார் நெஞ்சு என்றும் * நெஞ்சு அல்ல கண்டாமே 7
  • PT 11.7.8
    2019 வெறி ஆர் கருங் கூந்தல் * ஆய்ச்சியர் வைத்த *
    உறி ஆர் நறு வெண்ணெய் * தான் உகந்து உண்ட
    சிறியானை ** செங் கண் நெடியானைச் * சிந்தித்து
    அறியாதார் * என்றும் அறியாதார் கண்டாமே 8
  • PT 11.7.9
    2020 தேனொடு வண்டு ஆலும் * திருமாலிருஞ்சோலை *
    தான் இடமாக் கொண்டான் * தட மலர்க் கண்ணிக்காய் **
    ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு * ஆள் ஆனார் அல்லாதார் *
    மானிடவர் அல்லர் என்று * என் மனத்தே வைத்தேனே 9
  • PT 11.7.10
    2021 ## மெய்ந் நின்ற * பாவம் அகல * திருமாலைக்
    கைந் நின்ற ஆழியான் * சூழும் கழல் சூடி **
    கைந் நின்ற வேல் கைக் * கலியன் ஒலி மாலை *
    ஐயொன்றும் ஐந்தும் * இவை பாடி ஆடுமினே 10