The Abode of the One Who Measured the Worlds is Sālagrāma
உலகளந்தான் வாழுமிடம் சாளக்கிராமம்
993 தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்இழுதும்உடனுண்ட
வாயான் * தூயஅரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலியை
ஏயானிரப்ப * மூவடிமண்இன்றேதாவென்று உலகேழும்
தாயான் * காயாமலர்வண்ணன் சாளக்கிராமம் அடைநெஞ்சே!